
பத்தரமுல்லையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டமையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சேவை இன்று(29) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
பத்தமுல்லை இசுருபாயவிலுள்ள புதிய கட்டடத்திலிருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளவுள்ளதாக, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லக்ஷான் டி சொய்சா தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கடவுச் சீட்டு பெற்றுக் கொள்ளும் ஒருநாள் சேவை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய நிலையத்தின் ஊடாக பொது மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க முடியும் என குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் எம்.என். ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கண்டி மாத்தறை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள பிராந்திய அலுவலகங்களின் சேவைகளும் வழமைபோன்று இடம்பெறவுள்ளன. - Engal Thesam -
Post a Comment
bueno eso esperemos. como le dije antes con otros sistemas no pude cobrar y perdi me tiempo con eso, es por eso que tengo un poco de de8o2nfiansa&#so30;supcngo que ahora solo es cuestion de tiempo.. saludos..A Favor o En contra: 1 0