இந்தியாவுக்கு போகும்போது ஞானசாகர தேரரரையும் உடன் அழைத்து செல்வோம் இவ்வாறு தமிழ் முற்போக்கு முண்ணியின்தலைவரும் அமைச்சுருமான மனோ கணேஸன் அவர்கள் பகிரங்க சாட்டையடி கொடுத்துள்ளார்.
அவர்மேலும் கூறுகையில் இந்த நாடு ஆதிவாசிகளான வேடுவ சமூகத்திற்கே சொந்தமானது. நாங்கள் வந்தேறு குடிகளென்றால் நீங்களும்(சிங்களவர்களும்)வந்தேறு குடிகளே!
விஜய இளவரசன் இந்தியாவின் மத்திய பிரதேசத்திலிருந்து இலங்கையின் கரையோரப் பகுதிக்கு தோழர்களுடன் வந்து, வேடுவ இளவரசியை மணமுடித்தான். பின்னர் வேடுவ இளவரசியை விரட்டி விட்டு தென்இந்தியாவில் இருந்து தமிழ் பெண்களை வரவழைத்து விஜய இளவரசனும் தோழர்களும் திருமணம் செய்து கொன்டனர்.இதுதான் வரலாறு.
எனவே இந்நாட்டை வேடுவ சமூகத்திடம் ஒப்படைத்துவிட்டு நாமனைவரும் வெளியேறுவோமா?
ஆகவே, இந்நாடு இங்கு வாழும் அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானது யார் யாரையும் வெளியேறும்படி சொல்ல முடியாது .......
முஸ்லீம்களுடன் பிரச்சினை ஏற்பட்டால் அரபு நாடுகளுக்கு விரட்டுவோமென்றோ ;தமிழர்களுடன் பிணக்கேற்பட்டால் இந்தியாவுக்கு விரட்டுவோமென்று இந்த ஞானசார தேரருக்கு மட்டுமல்ல யாருக்கும் சொல்ல எந்த அருகதையும் கிடையாது. இந்த நாடு சிங்களவர்,தமிழர்,முஸ்லீம்கள்...பறங்கியர் என அனைவருக்கும் சொந்தமான தாய் நாடு .....
கௌரவ அமைச்சர் மனோ கனேசன் அவர்கள் ஞானசார தேரரின் கூற்றுக்களுக்கு தெளிவான விளக்கமளித்துள்ளார்
Post a Comment