தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைமையகத்தில் உள்ள குர்மீத் ராம் ரஹீம் அறைக்கும், பெண்கள் விடுதிக்கும் இடையே ரகசிய சுரங்கப்பாதை இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ள நிலையில், அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூன்றாவது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தின் சிர்சா நகரில், 700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தேரா சச்சா சௌதா நிலையத்தில், பலத்த பொலிஸார் பாதுகாப்புடன் நீதிபதி தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை, நடத்தப்பட்ட சோதனையில் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் பெருமளவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், வெடிமருந்து தொழிற்சாலை ஒன்று சட்டவிரோதமாக செயற்பட்டமையும் தெரியவந்துள்ளது.
மேலும், சில சட்டவிரோத நடவடிக்கைகளில் குர்மீத் ராம் ரஹீம் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்துள்ள அதிகாரிகள், பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இன்று மூன்றாவது

Post a Comment