கடுவலையில் 23 வயதான இளைஞர் ஒருவர் பாரவூர்தியில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடுவலை பகுதியில் வீதியொன்றில் நின்றுகொண்டிருந்த குறித்த இளைஞன் திடீரென பாரவூர்தியின் பின் சில்லில் தலை வைத்து தற்கொலை செய்துள்ள கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளவர் கிரிந்திவல பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரியந்துள்ளது. இவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் குறித்த இளைஞரை அவரது தாய், சிகிச்சைக்காக கிரிந்திவல - ஹங்வெல்ல பகுதிக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர், வீதியில் குழப்பமாக நடந்து கொண்டுள்ள நிலையில், அந்த வீதியில் பயணித்த பாரவூர்தியின் சில்லில் திடீரென தலையை வைத்துள்ளார்.
தற்கொலை செய்வதற்கு முன் தான் தற்கொலை செய்து கொள்ளபோவதாக அவர் தாயிடம் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்துள்ளது.

Post a Comment