சொத்துக்குவிப்பு வழக்கில் தற்போது நான் சிறையில் இருக்க காரணமே நடராஜன்தான் என்று சசிகலா சிறையில் அழுது வருவதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தனது கணவர் நடராஜன் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில், நான் சிறைக்கு வருவதற்கு முக்கிய காரணமே நடராஜன்தான் என தன்னை பார்க்க வருவோர்களிடம் சசிகலா புலம்பி வருகின்றாராம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவர் குணம்பெற வேண்டி நான் பல கோயில்களுக்கு சென்றுள்ளேன்.
ஆனால், நடராஜன் கடவுள் இல்லை என்ற கொள்கையுடைவர் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டார்.
இதன் காரணமாகவே ஜெயிலுக்கு வருவதற்கு முழு காரணம் ஆயிற்று என்று மன்னார்குடி தரப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment