கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களாக கருதப்படும் அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் இன்று(28) உத்தரவிட்டார்.
கண்டி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் இனரீதியிலான வன்முறைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கடந்த தினம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment