நோன்பு நோற்கும் இலங்கை முஸ்லிம்களுக்கு வருடாந்தம் சவூதி அரேபியா அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படும் பேரீச்சம்பழத்தை தாமதியாது உரிய காலத்தில் வழங்குமாறு முஸ்லிம சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் ஊடாக இலங்கையிலுள்ள சவூதி தூதரகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மே மாதம் நடுப்பகுதியில் புனித நோன்பு ஆரம்பிக்கப்படவுள்ளதால் பேரீச்சம் பழங்களை உரிய காலத்தில் நாடெங்கிலுமுள்ள பள்ளிவாசல்கள் மூலம் மக்களுக்கு விநியோகிக்க வேண்டியுள்ளதாகவும் ஒரு வாரகாலத்துக்குள் பேரீச்சம்பழம் கிடைக்கப்பெற்றாலே இது சாத்தியமாகும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரிவித்தார்.
Post a Comment