தொடருந்து தொழிநுட்ப அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
பணி நிரந்தரமாக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக தொடரூந்து சேவைகள் தாமதம் மற்றும் தொடரூந்து சேவைகள் ரத்தாகும் நிலமைகள் ஏற்படலாம் எனவும் தொடரூந்து தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகளின் சங்கத்தின் பிரதான செயலாளர் டபிள்யூ. பீ.எஸ். கமல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
Post a Comment