ரயில்வே ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு நிறைவடையும் வரையில் ரயில் பயணிகள், தங்களது பயணச்சீட்டை அல்லது பருவச் சீட்டை பயன்படுத்தி, இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.
முன்னறிவித்தல் இன்றி ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை காரணமாக பயணிகள் முகம்கொடுத்துள்ள அசௌகரியங்களை கருத்தில் கொண்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment