ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக காவற்துறை மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் இன்று முதல் விஷேட பிரிவொன்று இயங்கவுள்ளது.
24 மணித்தியாலயமும் இயங்கும் இந்த பிரிவு, காவற்துறை தலைமையகத்தில் அமைய பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய போதைப்பொருட்கள் குறித்து 011 – 3024803, அல்லது 3024815, 3024820, 3024848, 3024850 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment