சிறையில் உள்ள ஞானசார தேரருக்கு வெளியில் இருந்து உணவை வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறு சிங்கள ராவய கோரிக்கை.

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வெளியில் இருந்து உணவை வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி பொதுபலசேனா அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புக்கள் இன்றைய தினம் சிறைச்சாலை ஆணையாளரிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளன.

மருத்துவ ஆலோசனைப்படி அவருக்கு முறையான உணவு வழங்கப்பட வேண்டும் என்பதால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இதனுடன் சிறைச்சாலையினுள் ஞானசார தேரருக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget