மட்டக்களப்பு மார்க்கத்திலான புகையிரத சேவை தெடர்ந்தும் பாதிப்பு.

மட்டக்களப்பு மார்க்கத்திலான புகையிரத சேவை வழமைக்கு திரும்ப மேலும் சில நாட்கள் ஆகும் என்று புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிலவுகின்ற சீரற்ற காலநிலை திருத்தப் பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த மீனகயா புகையிரதம் மொரகொல்லவெவ மற்றும் கோன்வெவ புகையிரத நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் தடம் புரண்டது.

இதனால் மூன்று புகையிர பொட்டிகள் தடம் புரண்டதுடன் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இந்நிலையில் கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கு புகையிரதங்கள் மஹவ புகையிரத நிலையம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget