கைதான முன்னாள் DIG நாலகடி சில்வா விளக்கமறியலில்.

கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் நாலகடி சில்வா அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு சதிதிட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படுகின்றமை தொடர்பில் இன்று ஐந்தாவது நாளாகவும் வாக்குமூலம் வழங்குவதற்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget