மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு நபர் இலங்கைக்கு நாடு கடத்தல்
பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு நபர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
அபூ பக்கர் மொஹமட் எனும் நபர் ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து குறித்த நபரிடம் தற்சமயம் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Post a Comment