இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவிப் பிரமாண நினழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (30) காலை இந்தியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியுடன் 12 பேர் அடங்கிய குழுவொன்றும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 8.20 மணிக்கு இந்திய விமான சேவைக்குச் சொந்தமான ஏ.ஐ. 282 ஆம் இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர்.
இந்த விமானம் இன்று முற்பகல் 11.50 மணிக்கு இந்தியாவின் புதுடில்லியை அடையவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Post a Comment