பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ண தேரர் கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
அமைச்சர் ரிஷாத் பதியதீன் , மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி விலக்கும் வரையில் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரப் போவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே குறித்த மூன்றுபேரையும் பதவி விலக்குமாறு அத்துரலிய ரத்ண தேரர் ஜனாதிபதிக்கு 24 மணித்தியாலங்கள் அவகாசம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment