நாட்டில் நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றுறுதியான எவரும் அடையாளம் காணப்படவில்லை.
இதற்கமைய, இதுவரையில், கொரோனா வைரஸ் தொற்றுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 730 ஆக உள்ளது.
கொவிட- 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 7 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, கொவிட்-19 தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த நிலையில்; சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 48 ஆக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 671 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அதேநேரம், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் இதுவரை 830 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குறிப்பிடப்படுகிறது.
Post a Comment