சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேரில் 3 பேர் விடுதலை



சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்து அதை கமராவில் பதிவு செய்து வைத்திருந்த 5 சிறுவர்களில் 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட டிக்கோயா தரவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

13 வயதுடைய பாடசாலை செல்லும் சிறுமியை 13, 14 வயதுடைய சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்து அதை கமராவில் பதிவு செய்து வைத்துள்ளனர்.

சிறுமியின் பெற்றோர்களினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதை தொடர்ந்து, நேற்று இரவு குறித்த சிறுவர்கள் 5 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் கமராவையும் மீட்டுள்ளனர்.

இதில் 2 சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் 3 சிறுவர்களை பொலிஸார் விசாரணையின் பின்னர் விடுதலை செய்துள்ளனர்.

குறித்த சிறுமியை டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜபடுத்தவுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(thnks to virakesari க.கிஷாந்தன்)

Post a Comment

Janice - hahaha…thanks for removing my comment. I love these nature pics and the deer totally crack me up. You captioned them well. I agree with Daniel, they would make great prln#s&t8211;especiaily the one deer running. All hooves are off the ground! Cool beans.

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget