அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதிபெற்ற தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு முதலாம் தவணைக்காக எதிர்வரும் 6ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளது.
2 ஆம் தவணை கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளன.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏப்ரல் 11ஆம் திகதி முதலாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டு, ஏப்ரல் 18ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Post a Comment