இராணுவத்தினரை நினைவுகூரும் முகமாக வருடாந்தம் இடம்பெறும் இராணுவ நினைவு தின நிகழ்வுகள், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளன.
தேசிய இராணுவ நினைவு தின பிரதான நிகழ்வு இன்று பிற்பகல் 2.00 மணியளவில் பத்தரமுல்லை நாடாளுமன்ற விளையாட்டரங்கில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு அருகில் இடம்பெறவுள்ளது.
அத்துடன், தாய் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவுகூரும் முகமாக இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒளி பூஜை நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் 6.00 மணியளவில் களனி ரஜமகா விகாரையில் இடம்பெறவுள்ளது.
Post a Comment