அலுகோசு (கைதிகளைத் தூக்கில் இடுபவர்) பதவிகளுக்காக விண்ணப்பங்களை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதை தொடர்ந்து சிறைச்சாலைகள் திணைக்களம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு அலுகோசு பதவிக்கான ஆட்சேர்ப்பு முன்னெடுக்கப்பட்டு, இருவர் சேர்த்துக் கொள்ளப்பட்ட பின்னர் அவர்கள் பணியிலிருந்து நீங்கியதை தொடர்ந்து குறிப்பிட்ட பதவிக்கான வெற்றிடம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment