புதிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இதற்கமைய, ரன்ஜித் மத்தும பண்டார - பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமப்புற பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சராக சத்தியபிரமாணம் செய்துள்ளார்.
பி.ஹெரிசன் - விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன மீன்பிடி மற்றும் நீர் வள அபிவிருத்தி அமைச்சராக சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதேவேளை, வசன்த்த சேனாநாயக்க வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக சத்திய பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment