நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்றைய தினம் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியானது.

அவர்களில் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுறுதியானவர்களுடன் தொடர்பை பேணிய ஹோமாகமையை சேர்ந்த நான்கு பேருக்கும், பிலிப்பைன்ஸில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானது.

அத்துடன் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுறுதியானவருடன் தொடர்பை பேணிய லங்காபுரையை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 704 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 11 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொவிட் 19 தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், 670 பேர் நாடளாவிய ரீதியி;ல் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget