நாட்டில் இன்று (19) மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று காலை வேளையில் மழையுடனான வானிலை நிலவுமெனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று மாலை வேளைகளில் அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும், சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் இடி, மின்னல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதன் காரணமாகவும் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதன் காரணமாகவும் பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
Post a Comment