கண்டி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹசோன் பலகாயவின் பிரதானி அமித் வீரசிங்க உள்ளிட்ட 35 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை இன்று தெல்தெனிய நீதவான் எம்.எச்.பரீக்டீன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Post a Comment