புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று.

ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாதத் தலைப்­பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று(16) மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்­ளது.

மௌலவி ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலைமையில் நடைபெ­றவுள்ள இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உல­மாவின் பிறைக்குழு உறுப்பி­னர்கள், முஸ்லிம் சமய பண்பாட்ட­லுவல்கள் திணைக்கள அதிகா­ரிகள், மேமன், ஹனபி பள்ளி­வாசல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில் தலைப்பிறை பற்றி எடுக்கப்படும் ஏகமனதான தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையினூடாகவும் ஏனைய ஊடகங்கள் மூலமாகவும் நாட்டு மக்களுக்கு உடனடியாக உத்தியோபூர்வமாக அறிவிக்­கப்படும்.

தலைப்பிறை சம்பந்தமான ஊர்ஜி­தமற்ற தகவல்களையோ வதந்திகளையோ மக்களுக்கு பகிர்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம்  கேட்கப்படுகின்றனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget